ஜனவரி, 2021 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: ஜனவரி 2021

மன்னிப்புடன் ஒரு எதிர்காலம்

1994-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா தேசத்தின் அரசு நிறவெறி அமைப்பிலிருந்து ஒரு புதிய ஜனநாயக திட்டத்தை அமல்படுத்தியது. இனப் பிரிவினையில் இருந்து (கருப்பினத்தவர் மற்றும் வெள்ளை இனத்தவர் பிரிந்து வாழ்ந்தது) ஒன்றிணைந்த மக்களாட்சிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த வருடங்களில் இனப்பிரிவினால் நடந்த குற்றங்களை எப்படி கையாள்வது என்பதை புதிய அரசாங்கத்தால் முடிவு எடுக்க முடியவில்லை.. இருப்பினும் தேச தலைவர்களால் கடந்த கால குற்றங்களை விட்டு விடவும் முடியவில்லை ஆனால் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை கொடுப்பது அந்த தேசத்தின் காயங்களை ஆழமாகிவிடும். தென் ஆப்பிரிக்காவின் முதல் கருப்பின அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயரான டெஸ்மன்ட் டுட்டு தனது “No Future Without Forgiveness” (மன்னிப்பு இல்லாமல் எதிர்காலம் இல்லை ) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறார் “நமக்கு சுலபமாக கிடைத்திருக்கலாம், பழிவாங்கும் நீதி கூட கிடைத்திருக்கும் ஆனா தென் ஆபிரிக்க முழுவதுமாக அழிந்திருக்கும்” என்று.

அந்த புதிய ஜனநாயக அரசு அமைத்த “உண்மை மற்றும் வேற்றுமையை அகற்றும்” குழு ஒன்றை அமைத்து உண்மை, நீதி, இரக்கத்தின் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தது. தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினவர்களுக்கு மறுசீரமைப்பிற்கான வழி வழங்கப்பட்டது. தைரியமாக உண்மையின் எதிர்கொண்டதால் அந்த தேசத்தால் குணமடைய முடிந்தது.

ஒருவிதத்தில், தென் ஆப்பிரிக்காவின் சங்கடங்கள் நமது போராட்டங்களையும் பிரதிபலிக்கலாம். நீதியையும் இரக்கத்தையும் பின்தொடர நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் (மீகா6:8), ஆனால் அநேக நேரங்களில் இரக்கம் என்பது பொறுப்பில்லாத தன்மையாகவும், நீதிக்காக பின்தொடர்வது பழி வாங்குவதாகவும் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

தீமையை வெறுக்கும் அன்பை உடையவர்களாய் மாத்திரம் இல்லாமல் (ரோ 12:9) நம்மோடு இருப்பவர்களின் மறுரூபமாகுதலையும் விரும்புபவராக இருக்க வேண்டும் (ரோ 13:10). இயேசுவின் ஆவியானவரின் வல்லமையால் தீமையை நன்மையால் மேற்கொள்வது என்ன என்பதை நாம் கற்றுக்கொள்ளலாம் (12:21).

தைரியத்தை உடுத்திக்கொள்

சுவிசேஷம் தடை செய்யப்பட்ட தேசத்தில் ஆண்ட்ரூ வாழ்ந்து வந்தார். உங்கள் விசுவாசத்தை எப்படி ரகசியமாக காத்து வருகிறீர்கள் என்று நான் கேட்டபோது, அவர் அதை ரகசியமாக வைப்பதில்லை என்று கூறினார். அவர் சபையின் முத்திரையை எப்போதும் தனது சட்டையின்மேல் அணிந்து தான் வெளியே செல்லுவார். அவர் கைது செய்யப்படும் நேரங்களில் கூட காவலர்களிடம் “அவர்களுக்கும் இயேசு தேவை” துன்று கூறுவார். அவர் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று ஆண்ட்ரு அறிந்திருந்ததால் அவர் தைரியமாக இருந்தார்.

தன்னை கைது செய்யும்படி 50 காவலர்களை இஸ்ரவேலின் ராஜா அனுப்பின போதும் எலியா அச்சுறத்தப்படவில்லை (2 இரா 1:9). தேவன் யார் பக்கம் இருக்கிறார் என்று அவர் அறிந்து அந்த 50 காவலாளிகளை பட்சிக்கும்படி வானத்திலிருந்து அக்கினியை வரப்பண்ணினார். ராஜா மறுபடியும் அதிக காவலாளிகளை அனுப்பினான், எலியா மறுபடியும் அதையே செய்தார். மூன்றாவது முறையாக வந்த காவலாளிகள் தலைவன் தங்களை விட்டுவிடும்படி எலியாவை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான். எலியா அவர்களை பார்த்து பயந்ததை விட அவர்கள் எலியாவை பார்த்து பயந்தது தான் அதிகம் எனவே தேவதூதன் எலியாவை அவர்களுடன் போவது பாதுகாப்பானது என்று கூறினான். (வச 13-15)

நமது எதிராளிகள் மீது அக்கினியை வரவழைக்க இயேசு விரும்புவதில்லை. அவரது சீஷர்கள் ஒரு சமாரிய கிராமத்தின் மேல் தாங்கள் அக்கினி வரவழைக்கிறோம் என்று கேட்டபோது, இயேசு அவர்களை அதட்டினார் (லூக்கா 9:51-55). நாம் வேறு ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம். இருப்பினும் எலியாவை போன்று தைரியம் உள்ளவர்களாய் - எல்லா மக்களுக்காக மரித்த இரட்சகரை பற்றி கூற தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். அது ஒரு தனி நபராக நாம் 50 பேருக்கு சமமாக நிற்பது போன்று இருக்கும் ஆனால் உண்மையில் அது ஒருவரான தேவனே நிற்பது. மற்றவர்களிடம் தைரியமாக அன்பு காட்ட இயேசு தருகிறார்.

மூச்சுத் திணறல்

எனது வீட்டின் அருகே உள்ள வீட்டு மேம்பாட்டு கடையில் ஒரு பெரிய பச்சை நிற பொத்தான் ஒன்று உண்டு. வாடிக்கையாளர்கள் ஏதேனும் உதவி வேண்டுமானால் அதை அழுத்தவும் அழுத்திய ஒரு நிமிடத்துக்குள் உதவுவதற்கு யாரும் வரவில்லையென்றால் வாங்கும் பொருட்களில் ஒரு தள்ளுபடி கிடைக்கும்.

இதை போன்ற சூழ்நிலையில் வேகமாக கவனிக்கப்படும் வாடிக்கையாளராக இருக்க நமக்கு பிடிக்கும். ஆனால் சேவை செய்ய வேண்டியது நாமாக இருந்தால் அது நமக்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும். நம்மில் அநேகர் நம் வேலைகளை மிகவும் விரைந்து அதிக மணி நேரம் வேலை செய்து மிகவும் சுருக்கமான நேரத்திற்குள் அதிக வேலையை முடிக்கும் கட்டாயத்திற்குள்ளாக அழுதப்படுகிறோம். ஒரு அவசரமான வாழ்க்கை முறைக்குள்ளாக அது செல்கிறது.

தேவன் இஸ்ரவேலருக்கு ஓய்வு நாளை கடைபிடிக்க கட்டளையிட்ட போது ஒரு முக்கிய காரணத்தை அறிவித்தார். “எகிப்தில் அடிமையாய் இருந்ததை மறந்து விடாதீர்கள்” (யாத் 5:15). அடிமைகளாக பார்வோன் நியமித்த குறுகிய காலத்துக்குள் வேலைகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது விடுதலை பெற்றதால், தாங்களும் தாங்கள் சேவை செய்தவர்களும் ஓய்வு எடுக்க ஒரு முழுநாளை ஆண்டவர் கட்டளையிட்டார். தேவனுடைய ஆட்சியில் சோர்வடைந்து வேலையினால் மூச்சுத்திணறும் யாரும் இருக்க கூடாது.

எந்நேரங்களில் சோர்வடையும் வரை அல்லது உங்களை காத்திருக்க செய்யும் மக்களிடம் எப்பொழுதெல்லாம் வேலை செய்து இருக்கிறீர்கள் ? நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வேலை இடைவெளி கொடுப்போம். விரைந்து வேலை செய்யும் கலாச்சாரம் பார்வோனுடையது, நம் தேவனுடையது அல்ல.

வல்லமையான ஓடை

வாஷிங்டன் டி சி நகரில் உள்ள ஆபிரிக்க-அமெரிக்க வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் தேசிய அருங்காட்சியகத்தில் அடிமைத்தனத்தையும் அதன் பின்விளைவுகளையும் கண்டு ஆராய்ந்துக் கொண்டிருக்கும்போது அங்குள்ள ஒரு அமைதியான அறையில் ஒளி வரக்கூடிய வெண்கல கண்ணாடிகளால்
ஆன சுவர்களில் தண்ணீர் மேலிருந்து மழைபோல ஊற்றி ஒரு சிறிய குளம் போன்று இருக்கும்.
அந்த அறையில் முனைவர் மார்ட்டின் லூத்தர் கிங் கூறிய சொற்கள் எழுதப்பட்டிருந்தன “நீதி மழையை போல பெய்யும் வரை, நேர்மை ஒரு வல்லமையான ஓடையை போல புரண்டு ஓடும் வரை நாம் போராடுவோம் என்று நாம் தீர்மானித்திருக்கிறேன்”.. இந்த வல்லமையுள்ள வார்த்தைகள் பழைய ஏற்பாட்டின் ஆமோஸின் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

மத வழிபாடுகளிலும்,பண்டிகைகள் கொண்டாடுவதிலும், பலிகள் செலுத்துவதிலும் அதிகம் நாட்டம் கொண்டு ஆனா உள்ளத்தில் தேவனை விட்டு வெகு தூரத்தில் இருந்த மக்களின் மத்தியில் தான் ஆமோஸ் தீர்க்கதரிசியாக வாழ்ந்து வந்தார். அவர்களுடைய செயல்கள் தேவனுடைய கட்டளைகளையும், தேவையுள்ளவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் ஒதுக்கினதால் தேவன் அவர்கள் செயல்களை நிராகரித்தார்.

அணைத்து மக்களின் நலனுக்காக உண்மையான அக்கறை தம் மக்கள் காட்ட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஆமோஸ் தன புத்தகத்தில் எழுதியுள்ளார். இப்பேற்பட்ட வாழ்வுமுறை மற்ற உயிரை வலிமையாக்கும் நதியாக இருக்கும்.

தேவனின் இணைந்து இருக்கிறோம் என்பதற்கு சான்றாக நம்மை சுற்றி இருப்பவர்களிடம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பது வெளிப்படுத்தும் என்று இயேசு கற்றுக்கொடுக்கிறார் (மத் 22:37-39). தேவனை நேசிக்க நம் இதயங்கள் நாடுவது நீதியை நேசிக்கும் இடத்தில் இருந்தும் வருவதாக.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

நாம் தனியாக இல்லை

ஃபிரெட்ரிக் பிரவுன் என்பவரின் விறுவிறுப்பான சிறுகதையான "நாக்" இல், அவர் எழுதினார், "பூமியின் கடைசி மனிதன் ஒரு அறையில் தனியாக அமர்ந்திருந்தான். கதவு தட்டும் சத்தம் கேட்டது”. ஐயோ! அது யாராக இருக்கலாம், அவர்களுக்கு என்ன வேண்டும்? என்ன மர்மமான ஜந்து வந்தது? மனிதன் தனியாக இல்லையே.

நாமும் இல்லை. லவோதிக்கேயாவில் உள்ள சபையினர், கதவு தட்டப்படுவதைக் கேட்டனர் (வெளி.3:20). இயற்கைக்கு அப்பாற்பட்டவராக அவர்களிடம் வந்தது யார்? அவருடைய பெயர் இயேசு. முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிவர் (1:17). அவருடைய கண்கள் நெருப்பைப் போல ஜுவாலித்தது, “அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" (வச.16). அவருடைய நெருங்கிய நண்பனான யோவான், அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தார் (வச.17). கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசமானது தேவனுக்குப் பயப்படுவதிலிருந்து தொடங்குகிறது.

நாம் தனியாக இல்லை, இது ஆறுதல் அளிக்கிறது. இயேசு, அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய் (எபிரெயர் 1:3) இருக்கிறார்.  ஆனாலும் கிறிஸ்து தம்முடைய வலிமையை நம்மை அழிக்க அல்ல, நம்மை நேசிக்கவே பயன்படுத்துகிறார். அவருடைய அழைப்பைக் கேளுங்கள், "ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்தால், நான் உள்ளே பிரவேசித்து அவனுடன் போஜனம் பண்ணுவேன், அவனும் என்னுடன் போஜனம்பண்ணுவான்" (வெளி.3:20). வாசலில் நிற்பது யாரோ? என்கிற பயத்துடன் நமது விசுவாசம் துவங்கி, அது வரவேற்பிலும் ஆற தழுவுவதிலும் முடிகிறது. நாம் பூமியில் கடைசி நபராக இருந்தாலும், எப்பொழுதும் நம்முடன் இருப்பேன் என்று இயேசு உறுதியளிக்கிறார். தேவனுக்கு நன்றி, நாம் தனியாக இல்லை.

வசன பயிற்சி

1800 களின் பிற்பகுதியில், வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கான யுக்திகளை உருவாக்கினர். முதலாவது 1877 இல் கனடாவின் மாண்ட்ரீலில். பின்னர் 1898 இல், நியூயார்க் நகரில் மற்றொரு கருப்பொருளில் யுக்திகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1922 வாக்கில், வட அமெரிக்காவில் ஒவ்வொரு கோடைக்காலத்திலும் இதுபோன்ற சுமார் ஐயாயிரம் நிகழிச்சிகள் செயல்பாட்டில் இருந்தது.

இவ்வாறுதான் கோடை விடுமுறை வேதாகம பள்ளியின் ஆரம்பக்கால வரலாறு தொடங்கியது. வாலிபர்களும் வேதாகமத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் தான் அந்த விபிஎஸ் முன்னோடிகளின் பேரார்வத்தைத் தூண்டியது.

பவுல் தனது இளம் சீடரான தீமோத்தேயு மீது இதேபோன்ற ஆர்வத்தை கொண்டிருந்தார். "வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது" நாம் "எந்த நற்கிரியையுஞ் செய்ய.. பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" என்றெழுதினார் (2தீமோத்தேயு 3:16-17). இது ஏதோ, 'வேதத்தைப் படிப்பது உனக்கு நல்லது' என்பது போன்ற மேலோட்டமான ஆலோசனையல்ல. பவுல் "ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற" வ.7) கள்ள போதகர்கள் எழும்பும் “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று" (வச.1) கடுமையாய் எச்சரித்தார். வேதாகமத்தின் மூலம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்வது இன்றியமையாதது. ஏனென்றால் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே நம்மை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக்குகிறது (வ. 15).

வேதத்தை படிப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அது பெரியவர்களுக்கும்தான். அது கோடைக்காலத்திற்கு மட்டுமல்ல; அது ஒவ்வொரு நாளுக்கும் ஏற்றது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினார், "பரிசுத்த வேத எழுத்துக்களை நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்று" (வச.15), இதனால் நாமும் சிறுவயது துவங்கியே வேதம் கற்கவேண்டும் என்றல்ல. வாழ்க்கையின் எந்த கட்டத்தில் இருந்தாலும், வேத ஞானம் நம்மை இயேசுவோடு இணைக்கிறது. இது நம் அனைவருக்குமான தேவனின் விபிஎஸ் பாடம்.

தேவன் முன் அமர்ந்திருத்தல்

உயிருள்ள ஒரு நபரின் முதல் புகைப்படம் 1838 இல் லூயிஸ் டாகுரே என்பவரால் எடுக்கப்பட்டது. அந்த புகைப்படம் ஒரு மதிய நேரத்தில் பாரீஸில் உள்ள ஒரு வெற்று நுழைவாயிலிருந்த ஒரு உருவத்தைச் சித்தரிக்கிறது. ஆனால் அதில் ஒரு தெளிவான மர்மம் இருக்கிறது; அந்த நேரத்தில் தெரு, நடைபாதை வண்டிகள் மற்றும் பாதசாரிகளின் போக்குவரத்தால் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அந்தப் படத்தில் அவ்வாறாக இல்லை

அந்த மனிதன் தனியாக இல்லை. புகைப்படம் எடுக்கப்பட்ட பிரபலமான பகுதியான "புலவர்ட் டு டெம்பிள்" இல் மக்கள் இருப்பார்கள். குதிரைகள் இருக்கும். அந்தப் படத்தில் அவ்வாறாகக் காட்டப்படவில்லை. புகைப்படத்தைச் செயலாக்குவதற்கான ஒளிப்படப்பிடிப்பு நேரம் (டாகுவேரியோ வகை ஒளிப்பட முறை என்பது பொதுப் பயன்பாட்டிற்கு வந்த முதல் ஒளிப்படப்பிடிப்பு முறை ஆகும்) ஒரு படத்தைப் பிடிக்க ஏழு நிமிடங்கள் எடுக்கும். அந்த நேரத்தில் அசைவில்லாமல் இருக்க வேண்டும். நடைபாதையில் இருந்த ஒரே நபர் புகைப்படம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர் மட்டுமே அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவர் தனது காலணிகளை சுத்தப்படுத்திக்  கொண்டிருந்தார்..

சில நேரங்களில் நிலைத்திருத்தல் என்பது செயலாலும் மற்றும் முயற்சியாலும் செய்ய முடியாததைச் செய்து முடிக்கிறது. சங்கீதம் 46:10ல், தேவன் தம்முடைய மக்களிடம், "நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்" எனக் குறிப்பிடுகிறார். "ஜாதிகள் கொந்தளிக்கும்போது" (வச.6), "பூமி நிலைமாறினாலும்” (வச.2), அமைதியாக அவரை நம்புபவர்கள், "ஆபத்துக்காலத்தில் அநுகூலமுமான துணை" யை  அவரில் கண்டடைவார்கள் (வச. 1).

"அமைதியாக இரு" என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரேய வினைச்சொல் "முயற்சியை நிறுத்து" என்றும் குறிப்பிடுகிறது. நமது வரம்புக்குட்பட்ட முயற்சிகளில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும் நாம் தேவனில் இளைப்பாறும் போது, அவரே நம் அசைக்க முடியாத “அடைக்கலமும் பெலனும்" (வச. 1) என்று காண்கிறோம்.